கொடுமையான நோய்களையும் நொடியில் குணப்படுத்தும் பூண்டுப் பால் மேஜிக் தெரியுமா.!? படித்து அனைவரும் அறிய பகிருங்கள்…!
அன்றாடம் நம்ம உறவுகளுக்காக பல மருத்துவ குறிப்புகளை கொடுத்துக் கொண்டிருகின்றோம்.கண்டிப்பாக இவை உங்களுக்கு பிரயோசனம் உள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். இன்று நாம் பார்க்கப் போவது பூண்டுபால் பயன்கள். சரி பூண்டு பால் என்றால் என்ன? இது இலகுவாக வீட்டிலேயே செய்துகொள்ளலாம். இலகுவாக செய்யக் கூடியதாக இருந்தாலும் இதன் பலன்கள் தலைக்கு மேல் என்று சொல்ல முடியும்.
மூட்டுவலி, வாய்வு பிடிப்பு, கால் வலி, இடுப்பு வலி, மலேரியா, காசநோய், யானைக்கால் நோய், ப்ளேக், நுரையீரல் சம்மந்தப்பட்ட நோய்கள், போன்றவற்றிக்கு இந்த ஒரு பால் போதுமானது. அத்துடன் முகத்தில் தோன்றும் முகப்பரு, எப்போதும் சோர்வு, அஜீரண கோளாறு, ஆகியவற்றிற்கும் இந்த பால் உடனடி தீர்வாகின்றது. சரி இப்போது இந்த பால் எப்படி செய்வது என பார்க்கலாம்.
பூண்டுப் பால் செய்ய தேவையான பொருட்கள். ஒருவர் குடிப்பதானால் பூண்டு 5 பல்லு. பால் 150 ml. மஞ்சள் தூள் அரை தேக் கரண்டி, மிளகு தூள் அரை தேக்கரண்டி, தேவையான அளவு பனங்கற்கண்டு. பூண்டு பால் செய்யும் முறை. முதலில் பூண்டை தட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின் அடுப்பில் பாத்திரத்தை வைத்து பாலை ஊற்றி அதனுடன் தட்டி வைத்த பூண்டை போட்டு கொதிக்க விடவும்.
பூண்டு நன்றாக வெந்ததும் மஞ்சள் தூள், மிளகு தூள், பனங்கற்கண்டு சேர்த்து மிதமான சூட்டில் வைக்கவும்.
ஓரளவு சூடானதும் பூண்டை நன்றாக பாலுடன் மசித்து விட்டு ஒரு கப்பில் ஊற்றி ஆற வையுங்கள். நன்றாக ஆறியவுடன் குடியுங்கள். இரண்டு அல்லது மூன்று நாட்கள் குடிக்கும் போதே உங்களுக்கு நல்ல பலன் கிடைத்துவிடும்.!