காதலியை இளைஞன் பாலியல் பலாத்காரம் செய்ததால் தனது சொந்த தங்கைக்கு இளைஞன் செய்த கொடூரம்..! இப்படியும் மிருகத்தனமான அண்ணனா.!?
உலகில் அதிகம் போற்றப் படுகின்ற உறவில் ஒன்று தான் அண்ணன் தங்கை பாசம். தற்போது இந்த பாசம் கேள்விக் குறியாக மாறிக்கொண்டிருக்கின்றது. இதற்கு சிலரது செயற்பாடுகள் தான் காரணமாக இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் சின்ன விடயத்திற்கும் உடைந்து போய் பொருட்களுக்கு அடிமையாகி விடுகின்றனர். அப்படி அடிமையாகிய அண்ணன் தங்கைக்கு செய்த கொடூரம் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
பெங்களூரை சேர்ந்த பிரான்ஸிஸ் என்ற நபர் தனது 16 வயது மகளை காணவில்லை என பொலீஸில் புகார் கொடுத்த நிலையில் பொலீஸார் விசாரணையை ஆரம்பித்தனர். சிறுமி காணாமல் போய் சில நாட்கள் ஆன பின்பும் அவரது கையடக்க தொலைபேசி ஆன் செய்யப்பட்டிருந்தது.
அதில் இருந்து மெசேஜ் போவது தெரிய வந்தது. தொலைபேசி சிக்னலை வைத்து தேடிய போது சிறுமியின் வீட்டில் இருந்து தொலைபேசி பயன்படுத்துவது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சிறுமி பியோனாவின் அண்ணனான சாம்சனிடம் விசாரணை செய்த பொலீஸாருக்கு அதிர்ந்தனர்.
சொந்த தங்கையை கொடூரமாக கொலை செய்ததை சாம்சன் ஒத்துக் கொண்டார். சாம்சன் உயிருக்கு உயிராக பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணை 2017ம் ஆண்டு ராஜேஷ் என்ற இளைஞன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதனால் மனமுடைந்த சாம்சன் கஞ்சா மற்றும் குடிபோதைக்கு அடிமையாகி இருந்தான்.
இதனால் கோபமடைந்த தந்தை பிரான்ஸிஸ் மகனின் தொலைபேசியை பறித்து விட்டு வீட்டில் இருக்கும் படி அறிவுரை வழங்கியுள்ளார். வீட்டில் இருந்த சாம்சனுக்கு தங்கை அவரது காதலனுடன் மெசெஞ் செய்வது தெரியவந்துள்ளது. தன்னை தொலைபேசி பாவிக்க விடாத தந்தை தங்கையை பாவிக்க விட்டதால் கடுப்பாகி உள்ளார்.
இதனால் தங்கையுடன் சண்டை போட்டுள்ளார். தங்கையும் முரண்டு பிடித்ததால் அருகில் இருந்த சுத்தியலால் அடித்து தங்கையை கொலை செய்துள்ளார். அதன் பின் காரில் சடலத்தை ஏற்றிச் சென்று புதைத்துள்ளார். இவை அனைத்தையும் பொலீஸ் விசாரணையில் சாம்சன் கூறியுள்ள நிலையில் அவரை பொலீஸார் கைது செய்துள்ளனர்..!!