மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் விடுத்த முக்கிய அறிவிப்பு..!!!!
சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டாலும் 69 சதவிகித இட ஒதுக்கீடு முறை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பகிரங்கமாக அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க மத்திய அரசு தீர்மானித்த நிலையில் மாநில அரசின் நிதிப் பங்கீட்டு ஒப்புதலுக்கான பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
சிறப்பு அந்தஸ்து பெற்றுக்கொள்வதற்கு பல்கலைக்கழகங்களில் 49.5 சதவிகித இட ஒதுக்கீடை செயற்படுத்த வேண்டும் என்று, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவு விட்டிருந்ததால், தெளிவான விளக்கம் கூறி தமிழக உயர் கல்வித்துறை மற்றும் மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.அதற்கு பதில் கூறும் வகையில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அண்ணா பல்கலைக்கழகம் மாநில பல்கலைக்கழகம் என்பதாலும், அதற்காகவே 69 சதவிகித இட ஒதுக்கீடு முறை தொடரப்பட்டு வருகின்றதாக, அதில் மாற்றம் இருக்காது என கூறியுள்ளது.
அதைத் தொடர்ந்து சிறப்பு அந்தஸ்துக்கு தேவைப்படும் ஆயிரம் கோடி நிதியை வழங்க ஒப்புதல் குறியுள்ளதாக தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.