வயதுக்கு வந்த பெண்களுக்கு ஏன் வெள்ளைப் படுதல் ஏற்படுகின்றது.? விளக்கமும் தீர்வும் இதோ..!!
மனித உடல் என்று பார்த்தாலே அழிந்து போவது தானே பின்பு ஏன் இத்தனை மருத்துவ குறிப்புகள் என சிலர் கேட்டு இருந்தார்கள். என்றோ ஒரு நாள் மரணம் எம்மை அழைத்துச் செல்லும் என்பது அனைவரும் அறிந்ததே அதற்காக அவஸ்தை பட்டு துடித்து துடித்து மரணிக்க யார் தான் விரும்புவீர்கள் சொல்லுங்கள்.?
மண்ணில் மனிதனாக நாம் வாழும் காலம் வரை யாருக்கும் பாரமின்றி நோய்கள் இன்றி ஆரோக்கியமாக செல்வோம் அதற்காகவே இந்த குறிப்புகள். மருத்துவ குறிப்புகளில் இன்று நாம் பார்க்கப் போவது மிக முக்கியமான குறிப்பாகும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுதல் நோய்க்கு தீர்வு பற்றி பார்ப்போம்.
15 வயதில் தொடங்கி 45 வயது வரை இந்த வெள்ளைப் படுதல் இருகின்றது. வெள்ளைப் படுதலை வீட்டில் உள்ள பெரியவர்கள் உச்சணத்தால் ஏற்படுகின்ற நோய் என்பார்கள். இந்த வெள்ளை படுதல் சாதாரண உச்சணத்தால் ஏற்படுவதும் இருகின்றது.அதே நேரம் கர்ப்ப பை புற்று நோய், குடல் புண், போன்ற இன்னும் சில விடயங்களுக்காகவும் வருகின்றது.
சாதாரண வெள்ளை படுதலில் அதிக நாற்றம் இருக்காது அதே நேரம் வயிற்றில் பிரச்சனைகள் இருந்தால் நிச்சயம் ஒரு வித துர் நாற்றத்துடன் வெள்ளை படுதல் நடக்கும்.இன்று வெள்ளை படுதல் நோய்க்கு தீர்வை பார்க்கலாம். அருகம்புல் ஒரு கைபிடி. கீழ் வாய் அல்லது கீழ் வாழா என்றழைப்படுகின்ற கீழா நெல்லி ஒரு கைப்பிடி.
தயிர் முக்கால் கப். இவ்வளவு தான். இதை வைத்து வெள்ளை படுதலுக்கு மருந்து எப்படி செய்வது என்று பார்க்கலாம். முதலில் அரும்கபுல் மற்றும் கீழா நெல்லியை அரைத்து சார் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த சாற்றை தயிரில் ஊற்றி நன்றாக கலந்துகொள்ளுங்கள்.
இதில் உங்களுக்கு தேவை என்றால் உப்பு கொஞ்சம் கலந்து கொள்ளலாம்.இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர வெள்ளைப் படுதல் முற்றாக நீங்கிவிடும். அதன் பின் எப்போதுமே வராது இதனை இரண்டு அல்லது மூன்று வாரங்கள் தொடர்ந்து குடித்து வர வேண்டும். பிடித்தால் உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்…!