உணவு குழாய் அடைப்பா.? வயிறு மற்றும் உணவு குழாயை சுத்தப் படுத்தும் அற்புத மருத்துவம்..! இதோ படித்து பகிருங்கள்…!!
வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் நிறைந்துள்ள காரணத்தினால் உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரித்து, ஞாபக மறதியை தடுக்கலாம். வெல்லத்தில் அதிகளவான மருத்துவ குணங்கள் உள்ளதனால் சித்த மருத்துவத்தில் சில வியாதிகளுக்கு மருந்து தயாரிக்க வெல்லத்தைப் பயன்படுத்துவார்கள். ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா நோய்க்கு வெல்லம் ஒரு வரப்பிரசாதம்.
வெல்லத்தில் நீர்ப்புத் தன்மை இருப்பதால் வெயில் காலங்களில் உடலில் ஏற்படும் உபாதைகளுக்குஇதை சாப்பிட்டு வந்தால் உடல் சமச்சீர் அடைந்துவிடும்.வெல்லத்தில் அதிக நார்ச்சத்து உண்டு. அது உணவுக் குழாய், வயிறு, நுரையீரல் என உடலின் உள் உறுப்புகளை சுத்தம் செய்யக் கூடியது.
செரிமானத் திரவங்களைத் தூண்டிவிட்டு, ஜீரணத்தை சரி செய்கிற சக்தி வெல்லத்துக்கு இருப்பதனால் உணவு உண்டபின்னர் சிறிதளவு வெல்லம் சாப்பிடுவது நல்லது.பித்தம், வாதம் மற்றும் காமாலை நோய்களுக்கு வெல்லத்தை பானமாக்கி பருகிவர மாற்றங்கள் உண்டாகும்.
வெல்லம் மற்றும் பனைவெல்லத்தில் இரும்புச் சத்தும் கால்சியமும் அதிகமாக உள்ளது. சர்க்கரை தயாரிப்பின் போது, அதை வெண்மையாக்குவதற்காக அதில் சில ரசாயனங்களைச் சேர்ப்பதால், இரும்புச்சத்து அழிக்கப்படுகிறது. வெல்லத் தயாரிப்பில் அந்த இழப்பு ஏற்படுவதில்லை.
பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையின் போது உடல் சோர்வாகவும், காரணமின்றி படபடப்பாகவும் இருப்பதனால் உடல் வலுவின்றி இருக்கும் போது சிறிதளவு வெல்லம் சாப்பிட்டால் தேவையான ஊட்டச்சத்தினை கொடுக்கும் திறன் கொண்டது.