இந்தியா – சீனா எல்லைப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் இறந்த இந்திய மற்றும் சீனா இராணுவத்தினரின் மொத்த எண்ணிக்கை வெளியாகியது..! இதோ..!!
நேற்றைய தினம் இந்தியா – சீனா எல்லையில் நடந்த மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் கொல்லப் பட்டதை இந்திய ராணுவம் உறுதி செய்தது. இந்த மோதலில் ஏற்கனவே மூன்று ராணுவ வீரர்கள் மரணமடைந்த நிலையில் படு காயமடைந்த 17 ராணுவ வீரர்கள் பின் வீரமரணம் அடைந்தனர்.
இந்தியா சீனா எல்லையான லடாக் பகுதியில் கடந்த சில நாட்களாக இரு நாட்டு இராணுவத்தினருக்கும் இடையில் முறுகல் நிலை தொடர்ந்த நிலையில் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி ஓரளவு கட்டுப் பாட்டுக்குள் வைத்திருந்தனர்.
ஆனால் நேற்றைய தினம் லடாக் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய இராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்ததை ராணுவ தரப்பில் இருந்து உறுதிபடுத்தப் பட்டது. இவர்களுக்குள் தமிழ் நாட்டைச் சேர்ந்த பழனி என்ற இராணுவ வீரரும் உள்ளார்.
இந்த நிலையில் சீனா இராணுவத்தை சேர்ந்த எத்தனை பேர் மரணமடைந்துள்ளனர் என்ற செய்திகள் வெளியாக தொடங்கியுள்ளது. இந்திய ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் 40 திற்கு மேட்பட்டவர்கள் மரணித்தும் 20 பேர் வரை காயப்பட்டும் இருக்கலாம் என கூறப் படுகின்றது. இது வரை இறந்த வீரர்கள் தொடர்பாக சீனா எந்த ஒரு தகவலும் வெளியிடவில்லை..!!