ஈவு இரக்கம் இன்றி பிறந்து 7ஆவது நாளே ஆண் குழந்தை ஒன்றை ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் விற்ற பெற்றோர்..!!!! இந்தியாவில் நடந்த கொடூரம்..!!
அந்த காலத்தில் பெற்றோர் பிள்ளைகள் மீது அளவுக்கு அதிகமான அன்பை வைத்துள்ளனர். இதற்கு இடையில் சில பெண்களுக்கு குழந்தை பாக்கியமே கிடைப்பதில்லை. ஒரு குழந்தையை பெர்றேடுப்பதற்கு சில பெண்கள் இவ்வளவு சிரமங்களையும், வலிகளையும் தாங்கி தாய் என்ற அந்தஸ் பெறுகின்றாள். பல பெண்களுக்கு குழந்தைக்கு பெறும் பக்கியத்திற்காக தினம் தினம் ஏங்கி தவிர்த்து வருகின்றன. அந்த வகையில் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இன்றி பெற்ற குழந்தையை விற்ற தாய், தந்தையின் கொடூர சம்பவம் மணப்பாறையில் அரங்கேறியுள்ளது.
கடந்த 13 வருடங்களுக்கு முன் உயிர் கொல்லி நோயால் பாதிக்கப்பட்ட கொடும்பாளூர் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவருடன் திருச்சி தென்னூர் பகுதியைச் சேர்ந்த விஜயா என்ற பெண்ணிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு 5 வயதுடைய ஒரு மகளும், 3 வயதுடைய ஒரு மகனும் உள்ளன. விஜயாவும் உயிர் கொல்லி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த நிலையில் 3ஆவது விஜயாவுக்கு வீட்டிலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதைத் தொடர்ந்து இந்த தம்பதியினருக்கு அறிமுகமான தாதியர் மற்றும் மணப்பாறை அரசு மருத்துவமனை தரகர் அந்தோனியம்மாள் உதவியுடன் ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கு ஆண் குழந்தையை விற்கபேரம் பேசியுள்ளனர். பின்னர் வெற்று பத்திரங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டு மணப்பாறை பேருந்து நிலையத்தில் அருகில் உள்ள முனியப்பன் கோவில் முன்பு குழந்தையை விற்றுள்ளனர்.
இந்த நிலையில் குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது குழந்தையின் விபரங்களை முன்னுக்குப் பின் முரணாக கூறியதால் சந்தேகம் அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். விசாரணையில் குழந்தை விற்கப்பட்டது தெரியவந்துள்ளது.
அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவின் பேரில் இடைத்தரகர் அந்தோனியம்மாளை பிடித்து பொலிஸார் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர். அதில் குடும்ப வறுமை காரணமாக குழந்தையை விற்றதாக கூறப்பட்டது. பிறந்த 7ஆவது நாளே குழந்தை விற்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.