சென்னையில் தொடரும் கனமழை..!!!
இந்தியாவில் பல மாகாணங்களிலும், மாவட்டங்களிலும் இதனுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் சென்னை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர் பலத்த மழை செய்து வருகின்றது. நேற்றைய தினம் மாலை வேளையில் இருந்து 4மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை வெளுத்து வாங்கியது. இடைவிடாது தொடர்ந்து பெய்து மழையால் நுங்கம்பாக்கம், போரூர், அண்ணாசாலை, மெரினா கடற்கரை, அடையாறு, கிண்டி, கோடம்பாக்கம் உட்படபல பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.
வீதிகளில் வெள்ளம் போன்று மழைநீர் பெருக்கெடுத்ததால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்தனர். அதேவேளையில் புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர் உட்பட பல இடங்களிலும் பரவலாக மழை பெய்ததுள்ளது. அதன் இடையில் மத்திய இந்திய பெருங்கடல் பகுதியில் முன்னரே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டிருக்கும் நிலையில், தென்கிழக்கு அரபிக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் மழை தீவிரம் அடையும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.