சிறுமியை இனிப்பு வாங்கி தருவதாக கூறி தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன்..!! இந்தியாவில் அரங்கேறிய கொடூரம்..!!!
இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜோத்புர் அருகில் இருக்கும் லூனி கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வந்தனர். அதே பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் சிறுமிக்கு இனிப்பு வாங்கி தருவதாக கூறினார். தெரிந்த நபர் என்பதனால் பெற்றோர் கண்டு கொள்ளாத நிலையில், இனிப்பு வாங்கி தருகிறேன் என்று அழைத்து சென்றார். அதன் பின்னர் சிறுமியை அங்குள்ள வயல்வெளி பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுமிக்கு இதனால் அதிகளவு இரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில், சிறுமியை அப்படியே விட்டு விட்டு தப்பி சென்றுள்ளார். அதையடுத்து நிறைய நேரமாகியும் சிறுமியை காணாது பதறிய போன பெற்றோர், அங்குள்ள பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு இளைஞனை கைது செய்தனர். அவனது வாக்கு மூலத்தின் அடிப்படையில் வயலில் மயக்க நிலையில் இருந்த சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சிறுமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.