பிரசவ வலியால் துடி துடித்த காதல் மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவன்..! பின்னர் நடந்த எதிர்பாராத விபரீதம்..!!
இந்தியாவில் திருவள்ளூர் மாவட்டம் ஈகுவார்பாளையம் காப்புக்காட்டு பகுதியைச் சேர்ந்த சௌந்தர் என்ற இளைஞன் கடந்த வருடம் கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இதன் இடையியே கர்ப்பமான தனது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் காதலன் சௌந்தரே மனைவிக்கு பிரசவம் பார்த்தார். பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் பிறந்த சில மணி நேரத்திலேயே அந்த குழந்தை உயிரிழந்துள்ளது.
மேலும் இந்த சமப்பவம் தொடர்பாக தகவல் அறிந்த பொலிஸார் சௌந்தரை கைது செய்தனர். மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்ட காதல் மனைவிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.