தம்பி அண்ணியுடன் கள்ளத்தொடர்பு… ஆத்திரம் அடைந்த அண்ணனின் ஆவேச செயல்..!!
இந்தியாவின் திருச்சி மாவட்டத்திலுள்ள துவரங்குறிச்சி பிடாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய பழனிச்சாமி என்ற இளைஞன் லொரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் நத்தம் அருகேயுள்ள கம்பிளிப்பட்டி பகுதியில் இருக்கும் தனது அண்ணன் 35 வயதுடைய ஜெயராஜ் என்பவரின் வீட்டில் தங்கி வந்தார். இந்நிலையில், ஜெயராஜின் மனைவியான சின்னம்மாளுடன் ஏற்பட்ட பழக்கமானது, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அதனை அறிந்த ஜெயராஜ் தனது மனைவி மற்றும் தம்பியை அழைத்து கண்டித்துள்ளார்.
கணவன் இவ்வாறு கண்டித்ததால் கோபத்தில் சின்னம்மாள் பெற்றோரின் இல்லத்திற்கு சென்றுள்ளார். தனது தம்பியின் காரணமாக மனைவி கோபமடைந்து சென்றதை உணர்ந்த ஜெயராஜ், தனது தம்பியிடம் சென்று தகராறு ஈடுப்பட்டார். இந்த தகராறு இவர்களுக்குள் வாக்குவாதமாக அதிகரித்து கைகலப்பாக மாறவே, ஜெயராஜ் தனது தம்பியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றார். பழனிச்சாமியின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் பழனிசாமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளித்தும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதைத் தொடர்ந்து இது குறித்து தகவலறிந்த பொலிஸார், வழக்குப்பதிவு செய்து ஜெயராஜை தேடி வந்த நிலையில், அவரே வடமதுரை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.