வருமானம் காணாமல் குடும்பத்துடன் வறுமையில் வாடிய ஏழை இளைஞன்..! ஒரே நாளில் கோடீஸ்வரனாக மாறிய ஆச்சரியம்…!!!
இந்தியாவில் மேற்கு வங்க மாநிலத்தின் மிர்சார்பூரை சேர்ந்த 30 வயதுடைய ரிஜருல் என்ற இளைஞன் தச்சனாகபணியாற்றி வந்தார். ரிஜருலுக்கு உள்ளூரில் வருமானம் குறைவாக கிடைத்ததால் வேலை தேடி கேரளாவுக்கு சில காலத்துக்கு முன்னர் சென்றார்.
அங்கு கடுமையாக உழைத்தால் அவருக்கு தினக்கூலியாக ரூ 1000 கிடைக்கும். இந்த சூழலில் கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் தனக்கும் கொரோனா வைரஸ் தொற்று வந்துவிடுமோ என பயந்து போன ரிஜருல் சொந்த ஊருக்கு கடந்த வாரம் கனத்த மனதுடன் கிளம்பினார். ஏனெனில் கேரளாவில் கிடைக்கும் வருமானம் சொந்த ஊரில் கிடைக்காது என அவருக்கு தெரிந்திருந்தது. ஆனாலும் உயிருக்கு பயந்து ஊருக்கு சென்றார், அங்கு அவருக்கு சரியான வேலை இல்லாததால் குடும்பமே வறுமையில் வாடியது.
மேலும் இந்நிலையில் கிடைத்த வேலையை செய்து வந்த ரிஜருல் அதில் கிடைத்த பணத்தில் லொட்டரி சீட்டுகள் வாங்கினார். அதில் அவருக்கு ரூ 1 கோடி பரிசு விழுந்துள்ள நிலையில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். அதைத் தொடர்ந்து மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ள ரிஜருல் தெரிவிக்கையில், இனி தச்சு வேலை செய்ய போவதில்லை, சொந்தமாக தொழில் தொடங்கவுள்ளேன். அதோடு புது வீடு கட்டி என் பிள்ளைகளுக்கு தரமான கல்வி கிடைக்க லொட்டரி பணத்தை வைத்து ஏற்பாடு செய்வேன் என தெரிவித்துள்ளார்.