கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சி..!!
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் டெல்லி ஐபி எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய இளைஞன் ஒருவர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் கடந்த மாதம் 31 ஆம் திகதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் சிகிச்சை வழங்கி வந்த நிலையில், நேற்று இரவு அவர் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்கையில், அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு, மீண்டும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
தற்போது காலில் எலும்பு முறிந்த நிலையில் உயிர் பிழைத்துள்ள அவர், கொரோனா வைரஸ் பயத்தாலே இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார். ஆனால் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், நம்பிக்கையை இழக்க அவசியம் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.