இந்தியாவில் 144 தடை உத்தரவு எதிர்வரும் 3 ஆம் திகதி வரை நீடிப்பு..!!
எதிர்வரும் மே மாதம் 03 ஆம் திகதி வரை இந்தியாவில் 144 தடை உத்தரவு நீடிக்கப்படுகின்றதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இந்தியாவில் 144 தடை உத்தரவு மூலம் பெரிய அளவிலான பாதிப்புகளை தவிர்த்து வருகிறோம். உலக அளவில் மற்ற நாடுகளை விட கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக கடும் யுத்தத்தை நடத்தி வருகிறது. இந்த தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளை வீட்டிலேயே இருந்து கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் 18 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. எதிர்வரும் மே மாதம் 03 ஆம் திகதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். ஊரடங்கு மிக அவசியமானது. என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.