கொரோனா வைரஸினால் இயற்கையில் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றம்..! புகைப்படங்களை வெளியிட்ட நாசா..!!
கொரோனா வைரஸினால் மக்கள் மரணித்து வரும் நிலையில் இயற்கை மகிழ ஆரம்பித்துள்ளதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை மரணித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதனை கட்டுப் படுத்துவதற்கு ஒட்டுமொத்த உலக நாடுகளும் போராடி வருகின்றது.
வல்லரசு என மார்தட்டிக் கொண்ட நாடுகள் மரணங்களை தடுக்க முடியாமல் தடுமாறுகிறது. இந்த நிலையில் இயற்கை சிரிக்கிறது என்றால் வியப்பு தான். ஆம் கொரோனா வைரஸினால் உலகில் உள்ள பாதிக்கு மேற்பட்ட தொழில்சாலைகள் மூடப் பட்டுள்ளது. பல நாடுகள் முடக்கப் பட்ட நிலையில் வாக போக்கு வரத்துகள் குறைந்துள்ளது இதனால் காற்று மாசுபாடு குறைந்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
இதன்படி வடகிழக்கு அமெரிக்காவில் 30 % வீத மாசுபாடு குறைந்துவிட்டதாக நாசா புகைப்படம் வெளியிட்டுள்ளது. அத்துடன் 2015ல் இருந்து 2019 வரை காற்று மாசுபாடு அதிகரித்து உலகை அழிவு பாதைக்கு எடுத்துச் செல்வதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் இதனை முற்றிலும் தடுத்துள்ளது.
இந்த நிலை இன்னும் மூன்று மாதங்கள் தொடர்ந்தால் பூமி எதிர்கொள்ள இருந்த ஏராளமான இயற்கை அழிவுகள் குறையும் என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே கொரோனா வைரஸினால் ஓசோனில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள நிலையில் இதுவும் மிகப் பெரிய மாற்றம் என்கின்றனர் ஆய்வாளர்கள்…!!