மொட்டை மாடியில் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த அண்ணன்..! அதிர்ச்சியில் உறைந்த தங்கை..!
தமிழகத்தில் சேலத்தை சேர்ந்த 26 வயதுடைய அபிஷேக் மாறன் என்பவர் கார் டிரைவர் பணியாற்றி வந்தார். அவருக்கும் ஜெபினா என்ற பெண்ணுக்கும் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இதனால் அபிஷேக் மாறன், அவரது பாட்டி மற்றும் தங்கை அபிநயாவுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்றைய தினம் இரவு சாப்பிட்டு விட்டு மொட்டை மாடிக்கு அபிஷேக் தூங்க சென்றிருக்கிறார். காலையில் விடிந்து வெகு நேரமாகியும் அண்ணன் வராததால், அபிநயா மேலே சென்று பார்த்துள்ளார். அப்போது இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த அண்ணனை பார்த்ததும் கதறி அழுதார். அபிநயாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்துள்ளனர், உடனடியாக பொலிசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அதிகாரிகள் உடலை மீட்டு பிரே பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குறித்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் பொலிஸார் அதற்காக 4 தனிப்படைகளை அமைத்துள்ளனர், இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.