இன்று முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளும் பிரதமர் மோடி..!
இந்திய முழுவதும் ஊரடங்கு உத்தரவு இந்த வாரத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்றைய தினம் காணொலி மூலம் கலந்துரையாடுகிறார்.
உயிரைக் குடிக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முன்னரே 4 முறை மாநில முதலமைச்சர்களுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடியுள்ளார். ஊரடங்கு உத்தரவு முடிய ஒருவாரமே உள்ள நிலையில் 5 ஆம் முறையாக மாநில முதலமைச்சர்களுடன் காணொலியில் இன்றைய தினம் கலந்துரையாடவுள்ளார்.
பிற்பகல் 3 மணிக்குத் ஆரம்பிக்கும் குறித்த கலந்துரையாடலில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொள்கிறார். அப்போது கொரோனா வைரஸ் அதிகமாகப் பரவியுள்ள இடங்கள், பரவலுக்கான காரணம், அதைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை போன்றவை குறித்தும், போதிய அளவில் சோதனைக் கருவிகள், மருந்துகள் உள்ளனவா என்பது குறித்தும் பிரதமர் கேட்டறிவார் எனக் தெரிவிக்கப்படுகிறது.
ஊரடங்கு உத்தரவு நீட்டிக்க வேண்டியுள்ளதா என்றும், ஊரடங்கைத் தளர்த்தினால் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது பொருளாதாரப் பாதிப்பைச் சரிசெய்யத் தமிழகத்துக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கவும், வரி வருவாயில் தமிழகத்துக்கான பங்கை வழங்கவும் முதலமைச்சர் வலியுறுத்துவார் எனக் கூறப்படுகிற