திருமணமான இளம் பெண்ணை அடித்து துன்புறுத்தி ஆடைகளை அவிழ்த்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞன்!
இந்தியாவில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 28 வயதுடைய கணேஷ் ஆனந்த் என்பவர் மதுரை அய்யர்பங்களா பகுதியில் ஸ்பைடர் என்ற பெயரில் தனியார் டிடெக்டிவ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 18 மாதங்களுக்கு முன்னர் குறித்த நிறுவனத்திற்கு நிர்வாக பணிக்கு ஆள் தேவை என தனியார் நிறுவனம் மூலம் இணையத்தில் விளம்பரம் கொடுத்துள்ளனர். அதன் படி, ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவர் மதுரை செல்லூரை சேர்ந்த லோடுமேன் ஒருவரை 5 வருடத்திற்கு முன்னர் பேஸ்புக்கில் பழகி காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்த புது தம்பதியினர் மதுரை செல்லூரில் வசித்து வரும் நிலையில் குடும்ப வறுமை காரணமாக டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் பணிக்கு சென்ற அந்த பெண், இணையதளத்தில் வந்த டிடெக்டிவ் நிறுவனத்தின் விளம்பரத்தை பார்த்து விண்ணப்பித்துள்ளார். நேர்முகத்தேர்வில் அவரை கணேஷ் ஆனந்த் தேர்வு செய்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலிருந்து வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மே மாதம் 23-ஆம் திகதி அன்று அய்யர்பங்களாவில் உள்ள டிடெக்டிவ் நிறுவனத்திற்கு அந்த பெண் பணிக்குச் சென்ற நிலையில் மதியம் 12:30 மணியளவில் அலுவலக கதவுகளை அடைத்த டிடெக்டிவ் கணேஷ்ஆனந்த், அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார்.
அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் அங்கிருந்த கட்டையால் அவரை தாக்கி ஆடைகளை அவிழ்க்க கூறியுள்ளார். மறுத்த போது அடித்து ஊமை காயம் ஏற்படுத்தியுள்ளார். அடிக்கு பயந்து ஆடைகளை அவிழ்த்த பெண்ணை, முழுவதுமாக வீடியோ எடுத்த கணேஷ் ஆனந்த், தனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் சமூக வளைதளங்களில் வீடியோவை வெளியிடுவேன் என்றும், வெளியில் கூறினால் கணவரை கொன்று விடுவதாகவும் மிரட்டினார். அதைத் தொடர்ந்து, அங்கிருந்து தப்பிய அந்த பெண், உடனடியாக நடந்த சம்பவத்தை கணவரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து சென்று அவரை தாக்கியுள்ளார். அதையடுத்து, செல்லூர் பொலிஸ் நிலையத்தில் கணேஷ் ஆனந்த் கொடுத்த புகாரின் பேரில் அந்த பெண்ணின் கணவரை பொலிசார் கைது செய்தனர்.
அதையடுத்து, தனக்கும் அச்சுறுத்தல் வரலாம் என்று பயந்த அந்த பெண், மதுரை தல்லாகுளம் பொலிஸ் நிலையத்தில் தனக்கு நடந்த கொடுமைகள் தொடர்பாக புகார் செய்தார். இதைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு நேராக சென்ற பொலிசார், கணேஷ் ஆனந்திடம் நடத்திய விசாரணையில் சம்மந்தப்பட்ட அலுவலகத்தை முதலில் நகைக்கடை அலுவலகம் என்று கூறி வாடகைக்கு எடுத்ததும், பின்னர் அடிக்கடி பெண்கள் நடமாட்டம் இருந்ததால் சந்தேகம் அடைந்து அந்த காம்ப்ளக்சில் உள்ள பிற நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கேட்ட போது சினிமாவுக்கு ஆட்கள் தேர்வு செய்யும் நிறுவனம் என்று கூறியுள்ளார். அதற்கு பிறகு சந்தேகம் நீடித்ததால் இறுதியில் துப்புறிவு நிறுவனம் என்று கணேஷ் ஆனந்த் கூறியதாக அங்குள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர். அவரது நடவடிக்கையில் சந்தேகம் இருந்ததாகவும் இதனால் அவருடன் பழுகுவதை அங்குள்ளவர்கள் தவிர்த்துள்ளனர்.