கட்டிய கணவன் மற்றும் பெற்ற பிள்ளையை கைவிட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி..!! இதனால் ஆத்திரம் அடைந்த கணவனின் ஆவேச செயல்!
இந்தியாவில் சென்னை எம்ஜிஆர் நகர் சூளைப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய செந்தில்வேல்முருகன் என்பவர் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு 34 வயதுடைய மனைவியும், 13 வயதுடைய மகளும் உள்ளனர். இந்நிலையில், இவர்களின் வீட்டிற்கு அருகில் கவலாளியாக வேலை பார்த்து வந்த 62 வயதுடைய கோவிந்தசாமி என்பவருடன் லட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இருவரின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறி நெருங்கி பழகும் அளவிற்கு வந்துள்ளது. அதை அறிந்த லட்சுமியின் மகள் ,உடனடியாக இது தொடர்பாக அப்பாவான செந்தில் வேல்முருகனிடம் கூறியுள்ளார். மகள் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நிலையில் வேல்முருகன்,தனது மனைவியை கண்டித்தார். ஆனால் மனைவி அவரின் பேச்சை கேட்பது போன்று தெரியவில்லை. அதற்கு இடையில் ஊரடங்கு அமுலில் இருந்ததால், கூலித் தொழிலாளியான வேல்முருகன் வேலை இல்லாமல் கடும் அவதிப்பட்டு வந்துள்ளார்.
வேல்முருகன் வருமானம் எங்கே என்று கேட்டு லட்சுமி துளைத்தெடுத்து கொண்டே இருந்தார். ஊரடங்கு நேரத்தில் இவர்களின் தகராறு வீட்டிற்குள் வெடித்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் லட்சுமி 20 நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு கந்தசாமியுடன் வெளியேறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வேல்முருகன், கோவிந்தசாமி வீட்டிற்கு சென்று மனைவியை வீட்டுக்கு வருமாறு கூப்பிட்டுள்ளார். குடும்பம் நடத்த வா என்று பலமுறை கோவிந்தசாமி வீட்டுக்கு சென்று கூப்பிட்டும் அவர் மறுத்துவிட்டார். “வாழ்ந்தால் கோவிந்தசாமியோடு தான் நான் வாழ்வேன் என்று கூறியுள்ளார். அத்துடன் சமாதானம் செய்ய வந்த வேல்முருகனை கோவிந்தசாமியும், லட்சுமியும் சேர்ந்து அடித்து தாக்கியுள்ளனர்.
மேலும் இந்த அவமானம் தாங்க முடியாமல் வீட்டிற்கு வந்த வேல்முருகன், 2 லிற்றர்ர் பெட்ரோலை வாங்கி கொண்டு விடிகாலை 5.30 மணிக்கு கோவிந்தசாமி வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளார். கதவை திறந்த அந்த கள்ளக்காதல் ஜோடி மீது மளமளவென பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். வேல்முருகனின் செயலை சற்றும் எதிர்பாராத இருவரும் தீயில் துடித்தனர். அதற்குள் செந்தில்வேல்முருகன் அங்கிருந்து தப்பிவிடவும், அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிகிச்சை பலனின்றி லட்சும் பரிதாபமாக உயிரிழந்தார். 60 சதவீதம் தீக்காயங்களுடன் கோவிந்தசாமி உயிருக்கு போராடி வருகிறார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.