டெல்லி முதலமைச்சருக்கு நாளை கொரோனா தொற்று பரிசோதனை..!!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்குக் காய்ச்சல், தொண்டை வலி இருப்பதால் அவருக்குச் நாளைய தினம் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படவுள்ளது.
நேற்றைய தினம் முதல் அரவிந்த் கெஜ்ரிவாலுக்குக் காய்ச்சல், தொண்டைவலி இருப்பதால் அவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனால் நேற்று பிற்பகல் முதல் தான் பங்கேற்க இருந்த கூட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்துள்ளதுடன், வீட்டிலேயே அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். நாளைய தினம் அவர் கொரோனா தொற்று பரிசோதனை செய்யவுள்ளதாக ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவரான சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். திங்கள் காலை நிலவரப்படி டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,654 ஆக அதிகரித்தது குறிப்பிடத் தக்கது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நாளை கொரோனா சோதனை #Coronavirus | #Covid19 | #ArvindKejriwal https://t.co/LYkmbLInsB
— Polimer News (@polimernews) June 8, 2020