கொரோனா வார்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞன், யுவதி செய்த செயல்..!! கடுப்பான மருத்துவர்கள்!
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடைப்பகுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொடிய நோயான கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி வருகின்றது.நாளுக்கு நாள் எந்தவொரு வித்தியாசமும் இன்றி உயிரை காவு வாங்கி வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலேயே சென்னையில் தான் கொடிய கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவியுள்ளது. நாள்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையில் டாப் லிஸ்ட்டில் தலைநகரம் தான் உள்ளது. அங்குள்ள மருத்துவமனைகள் எல்லாம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன. அப்படி கொரோனா தொற்று அறிகுறி இருந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
குறித்த மருத்துவமனையில் கொரோனா வார்டில் ஏராளமானோர் இருந்த நிலையில், அதில் ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருந்தனர். இவர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருந்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இவர்களுக்கு கொரோனா சிசிக்சை ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் காதல் லீலையும் அரங்கேறியது. இந்நிலையில் கொரோனா சிகிச்சையில் இருந்த இவர்கள் இருவரும் திடீரென காணாமல் போயுள்ளனர்.
அதன் பின்னர் மருத்துவமனை ஊழியர்கள் தேடிய போது, வளாகத்தில் ஒரு இடத்தில் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது எங்கள் உயிரை பணயம் வைத்து உயிர்களை காப்பாற்றிக் கொண்டிருந்தால், இப்படி அஜாக்கிரதையாக இருக்கிறார்களே என்று மருத்துவர்கள் கடுப்பானார்கள். அதன் பின்னர் இருவரையும் அழைத்து எச்சரிக்கை கொடுத்து தற்போது சிகிச்சை அளித்து வரும் நிலையில், தற்போது மருத்துவமனையை விட்டு எங்கும் செல்லாமல் இந்த காதல் ஜோடி சிகிச்சை பெற்று வருகின்றனர்.