பொலிஸ் நிலையத்தையும், பொலிஸ் அதிகாரிகளையும் மாமியார் வீட்டோடு ஒப்பிட்டு டிக் டாக் வீடியோ செய்து அதை இளையத்தில் பதிவிட்ட இரண்டு இளைஞர்கள் கைது..!!
இந்தியாவில் புதுக்கோட்டை மாவட்டம் செம்பட்டிவிடுதி பொலிஸ் நிலைய பொலிஸார் கடந்த 3 ஆம் திகதி வாகன சோதனையில் ஈடுபட்ட போது வெள்ளாளவ் விடுதியைச் சேர்ந்த பாலைய என்ற இளைஞன் முக கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வந்ததால் அவரின் வாகனத்தை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை ஒப்படைக்க ஜாமீன்தாரர் 2 பேரை அழைத்து வருமாறு பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் கூறிய படி பாலையா தனது நண்பர்களான நெருஞ்சிபட்டியைச் சேர்ந்த வெற்றிவேல் மற்றும் மகேந்திரனை ஜாமீன் கையெழுத்து போடுவதற்கான பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தார். ஜாமீன் கையெழுத்து போட்டு விட்டு வெளியே வந்த வெற்றிவேல் டிக் டாக் வீடியோ ஒன்றை பதிவு செய்து அதை இளையத்தில் வெளியிட்டுள்ளார். குறித்த டிக் டாக் வீடியோவில் அந்த பொலிஸ் நிலையத்தை மாமியார் வீட்டோடு ஒப்பிடும் வகையில் வசனங்கள் இடம்பெற்று இருந்தது.
அதையடுத்து, பொலிஸ் நிலையத்தை தவறாக சித்தரித்து டிக் டாக் வீடியோ பதிவிட்டு இணையத்தில் வெளியிட்ட நெருஞ்சிப்பட்டியைச் சேர்ந்த வெற்றிவேலையும் வீடியோ பதிவு செய்த அவரது நண்பர் மகேந்திரன் ஆகிய இருவரையும் பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.