ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி..!
இந்திய – பாகிஸ்தான் அணிக்கு எதிராக போட்டியில் இந்தியாவுக்கு ஆதரவு வழங்கிய ரசிகர்களுக்கு நன்றி கூறிய இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி.
மான்செஸ்டர் நகரில் நேற்று நடைபெற்ற தொடரில் இந்திய அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை ‘மண்ணை கவ்வ செய்தது.
இதன் போது இந்திய அணியின் உலகக்கோப்பையை பாகிஸ்தான் அணி ஒரு போதும் வீழ்த்தியதில்லை என்ற உலக வரலாற்று பட்டமாக தொடர்ந்து வருகிறது. நேற்றைய தொடரிலும் அதிகமான ரசிகர்கள் இந்திய அணிகே ஆதரவு வழங்கினார்.
இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி ரசிகர்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றி கூறியுள்ளார்.
‘பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி மிக சிறப்பான முறையில் தொடரினை விளையாடி உள்ளது மைதானத்துக்கு திரண்டு வந்த ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து உற்சாகப்படுத்தினர்
நேற்று இடம்பெற்ற தொடரில் நடுவர் அவுட் கொடுப்பதற்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி வெளியேறினார். பின்பு தொலைக்காட்சி ரீப்ளேயில் பந்து மட்டையில் படாமல் இருந்தது தெரிய வந்தது.இதனால் கோஹ்லி மிகுந்த கவலை அடைந்தார். கோஹ்லியின் செயலைக் கண்டு, அவருக்கு அமைதிக்கான நிலைக்குசிறிய பரிசு கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.