மூச்சுத் திணறல், சளி, இருமலா ? இதோ இலகுவான அதே நேரம் இயற்கை மருத்துவம் உங்களுக்காக..! அதிகம் பகிருங்கள்…!
நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடிய சில உணவு வகைகள் உண்டு ஆனால் அவற்றை நாம் எடுத்துக் கொள்வதில்லை, ஏனெனில் அவை அத்தனை சுவையாக இருக்காது, அதன் சுவை பலருக்கு பிடிக்காது,ஆனால் அதில் தான் அதிக பலன் இருக்கும். இன்று அப்படி ஒரு மருத்துவ குணம் நிறைந்த காயை தான் பார்க்கப் போகிறோம்.
சுண்டக்காய், ஐயோ சுண்டக்காயா வேண்டவே வேண்டாம் என நீங்கள் முகம் சுழிப்பது தெரிகிறது, நமக்கும் பிடிக்காது தான் ஆனால் அதில் இருக்கும் மருத்துவ குணங்களை அறிந்தால் கண்டிப்பாக ஷாக் ஆகுவீர்கள் அட ஆமாங்க..!நாமாலும் ஆங்கில மருத்துவங்களை தானே செய்வோம்.
ஆனால் இந்த சுண்டக்காயை மாதம் ஒரு முறை வீட்டில் சமைத்து வரும் சாப்பிட்டு வாருங்கள் இந்த குடற்புழு தொல்லை இருக்கவே இருக்காது, இரவில் நிம்மதியாக தூங்கலாம். அதே போல் நாள்பட்ட சளி, வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் , அஜீரணம், இன்னும் மலச்சிக்கல், மூல நோய், ஆசன வாய் எரிச்சல், இரத்த கசிவு, இப்படி ஏகப்பட்ட நோய்களுக்கு ஒரே தீர்வு இந்த சுண்டக்காய் தான்.
கொஞ்சம் கசப்பு சுவை இருந்தாலும் வாரத்தில் இரண்டு அல்லது மாதத்தில் இரண்டு முறை,கட்டாயம் சாப்பிட்டு வாருங்கள், உங்களை எந்த ஒரு நோயும் நெருங்கவே நெருங்காது. இது கண்டிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள்.!