யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு நோய்தொற்று பரவல்..! இது வரை 90 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் 20 பேரால் ஆபத்து.!!
மக்களின் கவனயீனாத்தால் யாழ்ப்பாணத்தில் நோய் தொற்றுக்கள் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்ட டாக்டர் ஜமுனானந்தா இது தொடர்பாக மக்கள் விழிப்புணர்வுடன் செயற்படாவிட்டால் மிகப் பெரிய அழிவொன்றை சந்திக்க நேருமென தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் பரவிய நோய் தொற்று தற்போது இலங்கையில் கட்டுப் பாட்டில் உள்ள நிலையில் யாழில் காச நோய் தொற்று வேகமாக பரவி வருவதாக டாக்டர் ஜமுனானந்தா தெரிவித்துள்ளார். உலகில் பல ஆண்டுகளாக நிரந்தரமாக அழிக்க முடியாத நோய் தொற்றுகளில் முக்கிய இடம் பிடித்திருக்கும் இரண்டு நோய்கள் என்றால் அது காச நோய் மற்றும், எயிட்ஸ் தான்.
ஆரம்பத்தில் காச நோய்க்கு மருந்து இல்லாவிட்டாலும் தற்போது இதற்கு மருந்து உள்ளது. காச நோயால் பாதிக்கப் பட்ட ஒருவர் தொடர்ந்து 6 மாதங்கள் சிகிச்சை பெற்றால் இந்த நோயில் இருந்து முழுமையாக குணமடைந்து விட முடியும். ஆனால் யாழில் இந்த நோய்க்கான அடையாளங்களான உடல் மெலிதல், இரண்டு வார இருமல், நெஞ்சு வலி, காய்ச்சல், சளியுடன் குருதி வெளியேறுதல் இருந்தும் வைத்திய பரிசோதனை செய்துகொள்ளாமல் மற்றவர்களுக்கு தொற்றும் படி நடந்து கொள்கின்றனர் என டாக்டர் குற்றம் சுமத்தியுள்ளார்.
காச நோய்க்கான அறிகுறிகளுடன் யாழில் இது வரை 90 பேர் அடையாளம் காணப் பட்ட நிலையில் 20 பேர் நோயாளிகளாக இருந்தும் மக்களுடன் சேர்ந்து இருந்துள்ளனர். இதனால் காசநோயால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என டாக்டர் ஜமுனானந்தா தெரிவித்துள்ளார்..!!