கன்னியாகுமரி கொரோனா பரிசோதனை வார்டில் அனுமதிக்கப் பட்டிருந்த 2 வயது குழந்தை உட்பட மூவர் ஒரே நாளில் மரணம்..! ஆபத்தை உணருமா தமிழகம்..!?
தமிழகத்தில் கொரோனா வைரஸ் சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப் பட்ட மூவர் மரணமடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் நாடு கன்யாகுமாரியில் உள்ள கொரோனா வார்ட்டில் அனுமதிக்கப் பட்டிருந்த நிலையில் முதியவர் ஒருவர் உட்பட 24 வயது இளைஞன் மற்றும் இரண்டு வயது குழந்தை ஆகியோர் மரணமடைந்துள்ளனர்.
பிறப்பில் இருந்து எலும்பு நோயால் பாதிக்கப் பட்டிருந்த 2 வயது குழந்தைக்கு காய்ச்சல், இருமல் ஏற்பட்டதாலும், 24 வயது இளைஞனுக்கு நிமோனியா பாதிப்புடன் கொரோனா அறிகுறிகள் இருந்ததாலும், முதியவர் ஏற்கனவே நீரழிவு நோயினால் பாதிக்கப் பட்டிருந்த நிலையில் கொரோனா அறிகுறிகள் தென்பட்டதாலும் கன்யாகுமாரி கொரோனா பரிசோதனை வார்ட்டில் அனுமதிக்கப் பட்டனர்.
இதனை தொடர்ந்து இவர்களின் இரத்த மாதிரிகள் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு அனுப்பப் பட்ட நிலையில் மூவரும் இன்றைய தினம் மரணமடைந்துள்ளனர். இவர்களுக்கு கொரொனா தொற்று உள்ளதா என்பது தொடர்பான பரிசோதனை முடிவு வராத நிலையில் இந்த மரணங்கள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியை ஏற்படுத்தியுள்ளது.
கொரொனா வைரஸ் பற்றிய ஆபத்தை அரசு அறிவித்து வரும் நிலையில் சிலர் அதனை அலட்சியமாக கருதி வருகின்ற நிலையில் இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!!