மருத்துவரின் கவனக் குறைவால் பரிதாபமாக உயிரிழந்த 9 மாத கர்ப்பிணி பெண்..!!!
தருமபுரி குமாரசாமிபேட்டையைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் மனைவி அபிராமி. இவர்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், தற்போது தான் அபிராமி கர்ப்பமானதாக கூறப்படுகிறது. 9 மாத கர்ப்பிணியாக இருந்த அபிராமி தருமபுரியிலுள்ள ஸ்ரீ அன்னை என்ற தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் சனிக்கிழமை இரவு அந்த வைத்தியசாலைக்கு சென்ற அபிராமிக்கு மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் செவிலியர் சிகிச்சை அளித்ததாகவும், ஊசி போட்டதாகவும் புகார் கொடுக்கப்பட்டது.
அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஊசி போட்ட உடனே வலிப்பு ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகின்றது. ஆனால், ஆக்சிஜன் குறைவாக இருப்பதாக கூறி அந்த பெண்ணை தருமபுரி அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அரசு வைத்தியசாலையில் மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்த பின்னர் ஏற்கெனவே அபிராமி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் பிரேத பரிசோதனையின் பின்பு சடலத்தை வாங்க மறுத்த அந்த பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரச மருத்துவமையிற்கு வந்த பொலிஸார் அமைதியாக முறையில் இச் சம்பவம் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். பின்னர் அந்த பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தை விட்டு சடலத்தையும் வாங்கி கலைந்து சென்றார்கள். மேலும் இந்த கர்ப்பிணிப் பெண்ணின் மரணம் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில், தவறான , ஊசி மருந்தை மாற்றி கொடுத்தால் கர்ப்பிணிப் பெண் மரணித்ததாகவும், இந்த விஷயத்தை வெளியே சொல்லாமல் இருக்க லட்சக்கணக்கில் பணம் கொடுக்க தனியார் மருத்துவமனை பேரம் பேசியதாக உறவினர்கள் புகார் கொடுத்துள்ளார். ஆனால் நாங்கள் ஏற்க மறுத்துவிட்டதாகவும் அந்த தனியார் மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.