விநாயகமூர்த்தி முரளிதரன் என்கிற கருணா அம்மானால் தான் நாம் புலிகளையும் பிரபாகரனையும் அழித்தோம்..! கருணா அம்மானின் ரகசியங்களை வெளியிட்ட இராணுவ அட்மிரல்..!!
இலங்கையில் தமிழர்களின் கனவை கலைத்து, 50 ஆயிரத்துக்கு அதிகமான அப்பாவிகளின் மரணத்திற்கு காரணமானவர் என தமிழர்களால் வெறுக்கப் படுபவர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்கிற கருணா அம்மான். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடன் நெருங்கிய மற்றும் நம்பிக்கைகுறிய நபராக இருந்த கருணா அம்மான் யுத்த காலத்தில் பிரபாகரன் அவர்களுடன் முரண்பட்டுக் கொண்டதுடன் அவரிடம் இருந்து பிரிந்து அன்றைய ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச அவர்களுடன் இணைந்துகொண்டார்.
அதன் பின் ஈழ போரட்டம் தோல்வியடைய தொடங்கியது. இதன் பின் அரசுடன் இணைந்து இவரது செயற்பாடுகள் மக்களால் வெறுக்கப் பட்டது. இந்த நிலையில் இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் 5 ம் திகதி இடம்பெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.
இதன் போது கருணா அம்மான் பேசுகையில் தான் ஆயுதப் படை பிரிவின் தலைவனாக இருந்த நான் 2 ஆயிரம் தொடக்கம் 3 ஆயிரம் சிங்கள இராணுவதினரை கொலை செய்துள்ளேன், என்னை தேசிய பட்டியல் மூலம் ஜனாதிபதி தேர்வு செய்வதாக கூறினார், ஆனால் நான் மக்களின் ஆதரவுடனேயே செல்ல விரும்புகிறேன் என கூறியதை தொடர்ந்து சிங்கள மக்களிடையே பூகம்பம் வெடித்துள்ளது.
இது ஒரு பக்கம் சர்ச்சையாக இன்னுமொரு பக்கம் கருணா அம்மானுக்கு அன்றே மன்னிப்பு கொடுத்து விட்டோம், யுத்த காலத்தில் இரு தரப்பிலும் கொல்லப் பட்டனர், இதில் கருணா அம்மான் அரசுடன் இணைந்து தகவல்கள் கொடுத்த பின்னரே யுத்தத்தில் வெற்றி பெற்றோம் என இராணுவ அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
30 ஆண்டுகால யுத்தத்தை சில மாதங்களில் முடிக்க முடியுமாக இருந்தது என்றால் அது விடுதலை புலிகளின் ரகசியங்களை கருணா கொடுத்தது தான் என தெரிவித்த அவர் கருணா புலிகளுடன் இருந்த போது 3 ஆயிரம் வரை இராணுவத்தினரை கொலை செய்திருக்கலாம், ஆனால் ஒட்டுமொத்த புலிகளை அழிக்கவும் அவரே உதவினார். அதனால் தான் அவருக்கு மன்னிப்பு அழிக்கப் பட்டது என தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்..!!