இலங்கையில் தீவிர வாதிகளின் பயிற்சி நிலையம் பொலீஸாரால் கைப்பற்றப் பட்டுள்ளது..! வீடியோ இணைப்பு..!
காத்தான்குடி பகுதியில் ஐ எஸ் தீவிர வாத தாக்குதலுக்கு முன்பு “தேசிய தெளஹீத் ஜமாத்” பயிற்சி நிலையம் ஒன்று இராணுவத்தினரால் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. காத்தான்குடி மண்மனையில் ஒல்லிக்குளம் என்ற இடத்திலேயே குறித்த பயிற்சி நிலையம் அமைந்துள்ளாத பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கைதான அப்துல் ரவூப் என்பவரிடம் நடத்தப் பட்ட விசாரணையை தொடர்ந்து குறித்த இடத்தை பொலீஸார் சுற்றி வளைத்துள்ளனர். அங்கு ஏராளமான கத்திகள், வெடி பொருட்கள், மற்றும் பல பொருட்களை பொலீஸார் கைப்பற்றி உள்ளனர்.
மிகப் பெரிய காணி ஒன்றை வாங்கி உள்ள சஹ்ரானின் சகோதரன் ரில்வான் இதனை சுற்றி மிகப் பெரிய மதில் போல் தகரத்தால் அடைத்துள்ளனர். இதன் வாயிலில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட நிலையில் உள்ளதென பொலீஸார் கூறுகின்றனர். இது தொடர்பான வீடியோ கீழே இணைக்கப் பட்டுள்ளது..!
நம் செய்திகள் பிடித்தால் , இங்கே உள்ள பேஸ்புக் பட்டனில் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாமே. உங்கள் ஆதரவை நமது இந்தச் சேவைக்கும் வழங்கலாமே!!