கீழாநெல்லி என்கிற மூலிகை செடி உங்கள் வீட்டில் இருக்கிறதா.!? அப்படியானால் இனி உங்களுக்கு இந்த நோய் வரவே வராது.!!
கல்லீரல் பாதிப்பு மற்றும் அதன் அறிகுறிகள் பற்றி ஏராளமாக கதைத்துவிட்டோம், அதனால் இன்று கல்லீரல் பாதிப்பை குணபடுத்த மற்றும் ஏற்படாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம். கீழா நெல்லி என்பது கிராம புறங்களில் இலகுவாக கிடைக்க கூடிய ஒரு மூலிகையாகும்.
இது பல நோய்களுக்கு இலகு தீர்வை தருகிறது. கீழா நெல்லி இலைகளை கழுவி சுத்தப் படுத்தி எடுத்துக் கொள்ளுங்கள். மிக்ஸி கோப்பையை எடுத்து சீரகம் அரை கரண்டியை அதில் போடுங்கள்,
அதனுடன் கழுவி வைத்திருக்கும் கீழா நெல்லி இலைகளை சீரகத்துடன் சேர்க்கவும் அதனுடன் ஒரு கப் நீர் விட்டு நன்றாக ஜூஸ் போல் அடித்துக் கொள்ளுங்கள்.
இதனை எடுத்து ஒரு கப்பில் வடி கட்டிக் கொள்ளுங்கள். இதில் எலுமிச்சை சாறு இரண்டு கரண்டி சேர்த்து மிக்ஸ் செய்யுங்கள். இப்போது ஜூஸ் ரெடி. இதனை காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி குடித்து வந்தால் கல்லீரல் சுத்தமாவதுடன் கல்லீரல் சம்மந்தமான நோய்களையும் தடுக்கும்..
இதனை ஆகக்குறைந்தது வாரம் இரண்டு அல்லது மூன்று முறை குடியுங்கள்.இதனால் கல்லீரல் பாதிப்பு மட்டும் இன்றி மலச்சிக்கல், குடற்புழு, போன்றவையும் இதனால் தீர்கிறது. கீழ்வாழா நெல்லியை துவையல், சுண்டல் போன்றவையும் செய்து சாப்பிட்டு வரலாம்…இது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் உகந்தது..!!