பிரபல நடிகை குஷ்பு சற்று முன்னார் பொலீஸாரால் அதிரடி கைது.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!
பிரபல நடிகை குஷ்பு சற்று முன்னர் பொலீஸார் கைது செய்யப் பட்டுள்ளார். 80களில் தமிழ் சினிமாவில் அறிமுகமாக முன்னணி நடிகையாக இருந்த குஷ்பு பின் சுந்தர் சி அவர்களை திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் நுழைந்தார். இருப்பினும் சினிமா அரசியல் என பிஸியாக இருந்த குஷ்பு முதலில் திமுகவில் இணைந்தார்.
பின் அதில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு மாறிய குஷ்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை காங்கிரஸ் கட்சியில் இருந்த்தார். தற்போது பாஜகவிற்கு மாறியுள்ள குஷ்புவிற்கு பாஜகவில் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
இந்த நிலையில் திருமாவளவன் அண்மையில் பெண்கள் பற்றி தரக்குறைவாக பேசியதாக கூறி அவருக்கு எதிரான போராட்டம் ஒன்றை பாஜக சிதம்பரத்தில் ஏற்பாடு செய்துள்ளது. இந்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்ற நடிகை குஷ்பு சற்று முன்னர் பொலீஸாரால் கைது செய்யப் பட்டுள்ளார்.
பாஜகவின் இந்த ஆர்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ள நிலையில் சட்டத்தை மீறி போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற குஷ்புவை பொலீஸார் கிழக்கு கடற்கரைச் சாலையில் முட்டுக்காடு அருகே வைத்து கைது செய்துள்ளனர்.!