பொது இடத்தில் ஆண் நண்பருடன் மிக மோசமாக நடந்துகொண்ட இளம் பெண்.! அட்வைஸ் செய்யபோன நபருக்கு குறித்த பெண் செய்த மோசமான செயல்.!
சென்னை ஆவடி அடுத்த சேக்காடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த இளம் பெண் ஒருவர் தனது மகிழ்ச்சிக்கு இடையூராக இருப்பதாக நினைத்து காவலாளியை கம்பியால் தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த லக்ஷ்மி பிரியா என்பவரே இவ்வாறு மோசமாக நடந்துகொண்டதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பாக தெரிய வருவதாவது லக்ஷ்மி பிரியா போதைக்கு அடிமையாகி இருந்த நிலையில் தினமும் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து பார்ட்டிகளுக்கு செல்வதுடன் உச்சக் கட்ட போதையில் நண்பர்களுடன் குடியிருப்புக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். குறித்த குடியிருப்பில் காவலாளியாக இருக்கும் புருஷோத்தமன் பலமுறை லக்ஷ்மி பிரியாவிற்கு அட்வைஸ் செய்ததுடன் நள்ளிரவில் ஆண் நண்பர்களுடன் குடியிருப்புக்கு வர வேண்டாம் என கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த லக்ஷ்மி ப்ரியா என் ஆண் நண்பர்கள் பற்றி பேச நீ யார், நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என கூறி புருஷோத்தமன் கண்முன்னே ஆண் நண்பருடன் அட்டகாசம் செய்துள்ளார். இதனால் கோபப்பட்ட அவர் நாளை இதனை அனைவருக்கும் சொல்லுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்றதுடன் அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து புருசோத்தமனின் தலையில் அடித்துள்ளார்.
புருசோத்தமன் மயங்கி விழுந்த நிலையில் லக்ஷ்மி ஆண் நண்பர்களுடன் தனது அறைக்கு சென்றுள்ளார். சில மணி நேரத்தின் பின் மயக்கம் தெளிந்த புருசோத்தமன் பொலீஸாருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து லக்ஷ்மியின் வீட்டுக்கு வந்த பொலீஸார் லக்ஷ்மி மற்றும் அவரது ஆண் நண்பரை கைது செய்துள்ளனர். மற்றைய நண்பர்களை பொலீஸார் தேடி வருகின்றனர்.!