பல வருட காதல், சில நாட்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்த இளம் ஜோடி.! திடீர் மரணத்தால் சோகத்தில் உறவுகள்.!!
இந்தியாவில் மாங்களூரை சேர்ந்த இளம் ஜோடிகளின் மரணம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மங்களூரில் வசித்து வந்த ரயன் என்ற 26 வயதான இளைஞரும் பிரியா என்ற பெண்ணும் கல்லூரியில் இருந்து காதலித்து வந்துள்ளனர்.இருவரும் படிப்பை முடித்து நல்ல வேலை கிடைத்ததும் தங்கள் காதலை பெற்றோரிடம் கூறியுள்ளனர்.
படிப்பை முடித்து பொறுமையாக காத்திருந்ததால் இரு வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் சொன்னதுடன் பிரமாண்டமாக இருவருக்கும் திருமணம் முடித்து வைத்துள்ளனர். திருமணம் முடித்து சில வாரங்கள் இருவரும் பெற்றோரின் வீட்டில் இருந்த நிலையில் வேலைகாரன்மாக தனியாக வீடு எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் இருவரும் பணிக்கு சென்று திரும்புகையில் எதிர் திசையில் வந்த லாறி தம்பதியினர் மீது மோதியதுடன் சிறிது தூரம் இழுத்துச் சென்றுள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே பிரியா மரணமடைந்த நிலையில் வைத்தியசாலை எடுத்துச் சென்ற பின் ரயனும் மரணமடைந்துள்ளார்.
பெற்றோருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சடலத்தை பெற்றோர் அடையாளம் காட்டியுள்ளனர். பல வருட காதல், நிம்மதியாக வாழ்க்கையை ஆரம்பித்த ஜோடியின் மரணம் ஒட்டுமொத்த உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.!!