அசிங்கப் படுத்தும் “மரு”வை துளியும் வலி இன்றி நீக்கலாம்..! இதனை செய்ய்யுங்கள் போதும்…!!
இன்றைய காலம் மட்டும் அல்ல அன்றைய காலத்திலும் இருந்த சில நோய்கள் இன்றும் அதே அளவில் இருக்கின்றது, சில நோய்களுக்கு உணவு தான் காரணம் என்றாலும் சில நோய்கள் எம் உடலின் தன்மையை பொறுத்து எம்முடன் ஒட்டிக் கொள்கின்றன. அன்று இவற்றுக்கு ஆங்கில மருந்து இருக்கவில்லை அதனால் இயற்கை இலைகளை மூலிகைகளாக்கினார்கள்.
அது தான் இன்று ஆயுர்வேத மருத்துவ குறிப்புகளாக பகிர்ந்துகொண்டிருக்கின்றோம். இயற்கை எமக்காக எல்லா விடயத்தையும் கொடுத்துள்ளது அதனை சரியான முறையில் பயன் படுத்துவோம்.அதற்கான சிறு முயற்சி தான் இந்த மருத்துவ குறிப்புகள் பகிர்வது. இதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் உங்கள் நண்பர்கள் உறவினர்களுடன் பகிர்ந்து அனைவரும் அறியச் செய்யுங்கள்.
சரி இன்று என்ன விடயத்தை பற்றி பார்க்கப் போகின்றோம் என்றால் “மரு” இது அன்று தொட்டு இன்று வரை தொடர்கின்ற ஒன்று தான்.இது கழுத்துப் பகுதி, அக்குள் பகுதி, முகம், வயிற்றுப் பகுதியில் வருகின்றது. இதனால் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றோம். இவற்றை எப்படி தீர்ப்பது? அட அத்தனை பெரிய விடயமே இல்லை.
இந்த ஒரே ஒரு செடி போதும். அதாவது அம்மன் பச்சரிசி இலை அல்லது கீரை என்று கூறுவார்கள்.
இந்த செடியின் இலைகளை உடைத்தும் பார்த்தால் பால் போன்ற திரவம் வெளியேறும் அதை மரு இருக்கும்,இடத்தில் வைத்தால் போதுமானது. மரு விழுந்து விடுவதுடன் அந்த இடத்தில் தழும்பு கூட இன்றி அடையாளமே தெரியாது மறைந்துவிடும்.