பூட்டிய கடைக்குள் இருந்த குற்றவாளிகள்.! பொலீஸாரின் அதிரடி.! இலங்கையில் தொடரும் பதற்றம்.!
கடந்த வாரம் இலங்கையை உலுக்கிய தற்கொலை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை பொலீஸார் கைது செய்துள்ளனர். குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் என பொலீஸார் சிலரது புகைப்படங்களை வெளியிட்டனர். அதில் சகோதர்களான மொஹமட் சாதிக் அப்துல் ஹக் மற்றும் மொஹெமட் சாஹீத் அப்துல் ஹக் இருவது புகைப்படங்களையும் வெளியிட்டு பொலீஸார் தேடி வந்தனர்.
நாவலப்பிட்டி பகுதியில் உள்ள பள்ளி வாசல்கள் அரபிக் பாடசாலைகள் போன்றவற்றை பொலீசார் சுற்றி வளைத்த போது சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்றை கைப்பற்றி உள்ளனர். அதன் போது வேன் சாரதி கைது செய்யப் பட்டு விசாரணை செய்யப் பட்டார்.
அதன் போது குறித்த சகோதர்கள் இருவரையும் வேனில் ஏற்றி வந்ததாக சாரதி கூறியதுடன் குற்றவாளி கள் இருந்த பாதணி கடையையும் காட்டியுள்ளார். பூட்டப் பட்ட கடைக்குள் சாதிக் மற்றும் சாஹீத் பதுங்கி இருந்துள்ளனர். இருவரையும் கைது செய்த பொலீஸார் புலனாய்வு துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.!