“என்னை நீங்கள் வெறுக்க காரணம் என்ன.? ஈழத்தமிழ் மக்களுக்காக நான் என்ன எல்லாம் செய்திருக்கிறேன் தெரியுமா.?’ தன் மீதான குற்றச் சாட்டுகளுக்கு அதிரடி பதில் கொடுத்த முத்தையா முரளிதரன்.! வைரலாகும் அறிக்கை..!
இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அவர்களது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப் பட்டுவரும் நிலையில் இதில் முத்தையா முரளிதரனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ள விஜய் சேதுபதி அவர்களுக்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
விஜய் சேதுபதி முரளிதரனாக நடிக்க கூடாது என்றும் அப்படி நடித்தால் அது தமிழ் இனத்துக்கே செய்யும் துரோகம் எனவும் எதிர்ப்புகள் குவிந்து வருகிறது. இயக்குனர் பாரதிராஜா உட்பட முன்னணி இயக்குனர்கள், கவிஞர் வைரமுத்து உட்பட பல கவிஞர்கள் என அனைவரும் விஜய் சேதுபதி அவர்களை நடிக்க வேண்டாம் என கூறி வருகின்றனர்.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் முரளிதரனுக்கு எதிராக குரல் கொடுத்து வருவதை கண்ட முரளி தரன் இன்றைய தினம் அறிக்கை ஒன்றை விட்டுள்ளார். நீங்கள் என்னை இந்த அளவிற்கு வெறுக்க நான் எந்த தவறும் செய்யவில்லையே. ஏன் காரணம் இல்லாமல் இத்தனை குற்றச் சாட்டுகளை என் மீது வைக்கிறீர்கள்.
நான் இலங்கையில் பிறந்ததால் இலங்கை கிரிக்கெட் டீமில் விளையாடினேன், இதே நேரம் நான் இந்தியாவில் பிறந்து இருந்தால் இந்திய டீமில் விளையாடி இருப்பேன். நான் மலையக தமிழன், ஈழத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு எவ்வளவு உதவி செய்துள்ளேன் என்பதை சொல்லிக் காட்டவிரும்பவில்லை. ஈழத்தில் மக்கள் கொல்லப் பட்டதை நான் விரும்பினேனா?
என்னால் எப்படி முடியும்? நான் தமிழன் தான். ஈழத்தில் மக்கள் கொல்லப்பட்டதற்கு எப்போதும் நான் ஆதரவு தெரிவிக்கவில்லை என தொடர்ந்தும் மக்களுக்கு தெளிவு படுத்தியுள்ளார். இதோ அவரது அறிக்கை..!!