திறந்து சில நாட்களில் மூடும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ள பலாலி சர்வதேச விமான நிலையம்..! இதை விட தமிழர்களை கேவலப்படுத்த முடியாது..! புகைப்படங்கள் இணைப்பு..!!
கடந்த 17ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரால் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையம் பலாலி யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப் பட்டது. இந்த விமான நிலையம் திறக்கப் பட்டததை சிலர் கொண்டாடியும் சிலர் விமர்சனம் செய்தும் வந்தனர்.
ஆனால் தற்போது முழு இலங்கையும் ஏளனம் செய்யும் இடமாக பலாலி விமான நிலையம் மாறி உள்ளது. யாழ் விமான நிலையம் பாதுகாப்பற்றது என கூறிவந்த தென் இலங்கை ஊடங்கள் பயன் அற்றது என கேலி வீடியோக்களை வெளியிட ஆரம்பித்து விட்டது.
கடந்த இரண்டு நாட்களாக நாட்டில் இடம்பெற்று வரும் காலநிலை மாற்றத்தால் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. யாழ்ப்பாணத்திலும் அதிக அளவிலான மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் பலாலி விமான நிலையத்தில் விமான ஓடுபாதை உட்பட பல இடங்கள் சேற்று நீரால் நிறைந்துள்ளது.
தேர்தல் நெருங்குவதால் அவசர அவசரமாக திறக்கப் பட்ட விமான நிலையத்தில் எந்த பாதுகாப்பும் இல்லாத நிலையில் விமன நிலையம் முழுவதும் தண்ணீர் நிறைந்துள்ளது. இதனை பார்த்த சிங்கள ஊடங்கள் இந்த விமான நிலையம் எதற்காக என்றும் வீணான செலவு என்றும் அரசு தனது தேவைக்காக தேவையற்ற விடயங்களை செய்து மக்களின் பணத்தை கொள்ளை அடித்துள்ளது எனவும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது…!