இளைஞனின் தலையை வெட்டிக்கொலை செய்த தம்பதியினர்..!!! சென்னை நடந்த கொடூரம்..!!
இந்தியாவில் சென்னை கலைவாணர் நகரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் மீது கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை போன்ற பல வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் கடந்த 14 ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறிய சுரேஷ் அதன் பிறகு வீடு திரும்பாத காரணத்தினால் அவரது தாய் பல இடங்களில் தேடியும் சுரேஷ் கிடைக்காததால், பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக பொலிசார் விசாரணையை நடத்திய போது, சுரேஷூக்கு பாடி கலைவாணர் நகரைச் சேர்ந்த கார்த்திகா என்ற பெண்ணுக்கு தொடர்பு இருந்ததாகவும், இதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால், பொலிஸார் இது சம்பந்தமாக கார்த்திகா – ஜெயகொடி தம்பதியினரிடம் விசாரித்தனர்.
அப்போது சுரேஷ் எங்கள் வீட்டில் உள் அத்துமீறி நுழைந்து விட்டார், இதனால் நாங்கள் அவனை அடித்து உதைத்த போது, பெரிய அளவில் காயம் ஏற்பட்டதால், அவனை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல ஆட்டோவில் சென்றோம், ஆனால் ஆட்டோவில் இருந்து அவன் தப்பி சென்றுவிட்டான் என்று கூற, போலீசாருக்கு இவர்கள் மீது சந்தேகம் அதிகரித்துள்ளது.
அதைத் தொடர்ந்து கிடுக்குப்பிடி விசாரணையில், சுரேஷை நாங்கள் தான் கொலை செய்தோம் என்று வாக்கு மூலம் வழங்கியுள்ளனர்.
அதில், கள்ள உறவு வேண்டாம் என்று நல்ல படியாக பேசவே சுரேஷை அழைத்தோம். ஆனால், வாக்குவாதம் அதிகரித்ததால் ஆத்திரம் அடைந்து சுரேசை வெட்டிக்கொலை செய்து, தலையை துண்டித்து, உடலை மட்டும் செங்குன்றத்தை அடுத்த விளாங்காடுபாக்கம் அருகே முட்புதரில் வீசிவிட்டோம், தலையை வேறு எங்கயோ ஒரு ஒரு இடத்தில் வீசிவிட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.
அதற்கு பிறகு குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் முட்புதரில் அழுகிய நிலையில் கிடந்த சுரேசின் தலையில்லாத உடலை மீட்டனர். ஆனால் சுரேசின் தலையை கிடைக்காததால், பொலிஸார் தொடர்ந்தும் தேடி வருகின்றனர்.