ஒரு சொட்டு எண்ணெய் மட்டும் இருந்தால் போதும் கண்ணை சுற்றியுள்ள கருவளையத்தை நீக்கலாம்..!! என்ன எண்ணெய் தெரியுமா..!? இத படியுங்கள்…!!
புரட்சி வானொலியின் அழகு குறிப்புகள் பகுதியில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி . இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியை பார்த்து ஒரு பக்கம் நாம் மகிழ்ச்சி அடைந்துகொண்டிருந்தாலும் இந்த வளர்ச்சியால் பலவற்றை இழந்துகொண்டிருகின்றோம். அதில் ஒன்று எமது இயற்கை அழகு. தொழில்நுட்ப வளர்ச்சி எம் அழகை எங்கே கெடுக்கிறது என நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் இது தான் உண்மை.
உடல் எடை அதிகரிப்பது முதற்கொண்டு கண்ணில் கரு வளையம் அதிகமாகுவது வரை தொழில்நுட்பத்தின் பங்கு உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியால் அனைத்துமே அருகில் கிடைகிறது அதற்காக நாம் உடலை அசைத்து நடக்க கூட தேவையில்லையே… அப்படி போன்,கம்பியூட்டர், போன்றவற்றால் கண்களும் பாதிக்கின்றது.அதிக நேரம் கண்விழித்திருக்க எமக்கு எதுவும் தேவை இல்லை.
மொபைல் மட்டுமே போதும். அதனால் தான் இன்று பலரது விழித்திரை பாதிப்படைவதோடு கரு வளையமும் வருகிறது. எப்படி வந்தாலும் கண்களின் அழகை கெடுப்பது தானே கரு வளையம். சரி வாங்க கரு வளையம் நீங்க என்ன செய்ய வேண்டும் என பார்க்கலாம்.விளக்கெண்ணெய் என்று சொல்லப் படுகின்ற ஆமணக்கு எண்ணெய் தான் இன்று பயன்படுத்தப் போகின்றோம்.
இதன் ஒரு சொட்டு போதுமாகிறது. ஒரு சொட்டு ஆமணக்கு எண்ணெய்யை கையில் எடுத்து கண்களை மூடிக்கொண்டு கரு வளையம் உள்ள இடத்தில் மெதுவாக மசாஜ் செய்யுங்கள். இரண்டு தொடக்கம் மூன்று நிமிடம் ஆமணக்கு எண்ணெயினால் மசாஜ் செய்துவிட்டு அப்படியே விழிகளை மூடி தூங்குங்கள்.
காலை எழுந்து குளிந்த நீரால் முகத்தை கழுவுங்கள். ஒரு வாரம் செய்து பாருங்கள். முற்றிலும் கரு வளையம் மறைந்துவிடும்.இது சாதாரண விடயம் சரியாகாது என நினைக்க வேண்டாம் இது முன்றிலும் உண்மை..!