எதிர்வரும் 8 ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல்…!!!
எதிர்வரும் 08 ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. இதன் போது இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 07 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருப்பார் என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய விஜயத்தின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாரணாசி, உத்தரபிரதேசம், பீகார் மற்றும் திருப்பதி உட்பட இடங்களுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.