இந்தியாவில் தொடரும் மருத்துவ கொலைகள்..! வைத்தியர்கள் கொல்லப் பட்ட அப்பாவி பெண்..!
தமிழகத்தில் வைத்தியர்களின் கவனக் குறைவால் பெண் ஒருவர் இறந்த விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, தமிழ் நாட்டில் நாகர்கோவில் அருகே கொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் பவித்ரா. இவருக்கு சில வருடங்களுக்கு முன் சுரேஷ்குமார் என்பவருடன் திருமணமானது. பவித்ரா கர்ப்பமான நிலையில் கணவர் மற்றும் குடும்பத்தினரால் கொண்டாடப் பட்டு வந்தார்.
இந்த நிலையில் பவித்ராவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதால் குறித்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். பவித்ராவிற்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் திடீரென இரத்தப் போக்கு அதிகரித்தது. பணத்தை மட்டும் பெற்றுக் கொண்ட குறித்த தனியார் மருத்துவ மனை டாக்டர்கள் பவித்திராவிற்கு சரியான முறையில் மருத்துவம் செய்யவில்லை.
செய்வதறியாது திகைத்த உறவினர்கள் உடனடியாக இன்னுமொரு தனியார் மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்ற போது அங்கு சரியான மருத்துவ வசதி இல்லை என்று கூறியதால் அரச மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அரச மருத்துவமனையில் பவித்திராவை பரிசோதனை செய்த வைத்தியர்கள் பவித்ரா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதை தொடர்ந்து தனியார் மருத்துவமனை முன் ஒன்றுகூடிய உறவினர்கள்,
குறித்த தனியார் மருத்துவமனை வைத்தியர்கள் பவித்திராவை கொன்று விட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த பொலீஸார் வைத்தியசாலை நிர்வாத்தினரிடம் விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து போராட்டத்தை உறவினர்கள் கைவிட்டுள்ளனர்..!!