கொடூரமான முறையில் கொலை செய்து பெட்டியில் பூட்டி காரில் வைக்கப் பட்டிருந்த ப்ரீத்தியின் சடலம்..! என்ன நடந்தது .? கதறும் தங்கை..!
கொலைகள் ஏன் நடக்கிறது? எப்படி கொலையாளியிடம் ஏமாறுகிறோம் எதுவும் தெரியாமல் தான் வாழ்கிறோம். இளம் பெண்கள் அதுவும் படித்து பட்டம் பெற்று நல்ல உத்தியோகங்களில் இருப்போர் எப்படி ஏமாந்து போகின்றனர் இது தான் இன்றைய கேள்விக்குறியாக உள்ளது. இப்படியான விடயம் ஒன்று தான் ஆஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை ப்ரீத்தி ரெட்டி என்ற இந்திய வம்சாவளி பெண் ஒருவர் காணாமல் போய்விட்டதாக அவரது தங்கை நித்யா பொலீஸுக்கு புகார் கொடுத்துளார். மருத்துவ படிப்பினை முடித்து பல் மருத்துவராக இருந்த ப்ரீத்தி ரெட்டியின் வயது 32.
சிட்னியில் நடந்த மருத்துவ மாநாட்டில் கலந்துகொண்ட இவர் பின் வீடு திரும்பவில்லை. பலமுறை ப்ரீத்தியின் அழைப்பேசிக்கு அழைப்பு எடுத்த போதும் மொபைல் ஸ்விட் ஆப் என்றே வந்துள்ளது. அதன் பின்னர் பொலீஸுக்கு புகார் கொடுத்துள்ளார் நித்யா.
விசாரணை ஆரம்பித்த பொலீஸாரின் பார்வையில் முதலில் சிக்கியது ப்ரீத்தியின் முன்னாள் காதலர். நீண்ட நாட்களுக்கு பின்பு சந்திந்த இருவரும் ஹோட்டல் ஒன்றில் ரூம் புக் செய்து தங்கிய விடயம் தெரியவந்தது. இருவரும் பல் மருத்துவர்கள் அதனால் மாநாட்டில் கலந்துகொண்ட போதே பார்த்து பேசிக்கொண்டனர்.
இந்த நிலையில் முன்னாள் காதலனிடம் விசாரணை மேற்கொண்ட பொலீஸாருக்கு கிடைத்த விடயம் ப்ரீத்தி சென்று 6மணி நேரங்களை கடந்து விட்டது என்பதாகும். விசாரணை முடிந்து சென்ற இளைஞன் சிட்னியில் இருந்து சென்று நான்கு மணி நேரத்தில் இங்கிலாந்து நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி இறந்தது தெரியவந்தது.
இதனால் சந்தேகத்தின் பெயரில் விசாரணை அதிகமாக முன்னாள் காதலனுடன் ஹோட்டல் செல்லும் முன் ப்ரீத்தி கடை ஒன்றிக்கு சென்றதும் பின் அதிக டென்சனாக வந்ததும் சிசிடிவி கேமரா மூலம் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து பிரீத்தியின் கார் சிட்னியில் கிடைத்துள்ளது.
இதனை சோதனை செய்த பொலீஸார் காரில் உள்ள பெட்டியை பரிசோதனை செய்த போது அதில் பல இடங்களில் கத்தியால் குத்தப் பட்ட நிலையில் ப்ரீத்தியின் உடல் கைபெற்றப் பட்டுள்ளது? இன்னும் யார் கொலை செய்தார்கள் என்று தெரியாமல் பொலீஸார் விசாரணையை தொடர்கின்றனர்.!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”