மீண்டும் கூட்டுச் சேரும் பிரிந்து போன இலங்கை அரசியல் தலைவர்கள்…!
நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டதிலிருந்து பல்வேறு முரண்பாடுகளை கொண்டிருந்த இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையிலான முரண்பாடு உச்சக்கட்டமடைந்து கடந்த ஒக்டோபர் புரட்சியில் மைத்திரி எடுத்த அதிரடி நடவடிக்கையால் நல்லாட்சி அரசு முற்றாக முறிவடைந்தது. பல அதிரடி நடவடிக்கைகளுக்குப் பின்னர் மீண்டும் பிரதமர் பதவிக்கு வரும் வாய்ப்புக் கிடைத்தது.
தற்போது இரண்டு முக்கிய கட்சியின் பிரமுகர்களும் மேற்கொண்டுள்ள நடவடிக்கையால் மீண்டும் நல்லாட்சி அரசை அமைப்பதற்கும் இணங்கிப் போவதற்கும் இரு தலைவர்களும் உடன்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இணக்கப்பாட்டு அரசியலுக்காக எத் தரப்புடனும் சந்திக்க தயார் என்று தன்னைச் சந்தித்த சமாதானக் குழுவிடம் ரணில் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகின்றது.
எனினும் அக் குழு ஜனாதிபதியைச் சந்தித்த வேளையில் சாதகமாக யோசிக்கலாம் என்று பதிலளித்ததாகக் கூறப்படுகின்றது. எனினும் குழுவினரின் தொடர்ச்சியான வேண்டுதலை அடுத்து ரணிலுடன் சந்திக்க இணங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களுக்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”