லண்டனில் வீடற்றோருக்கு ஈரடுக்குப் பேருந்துகள் உதவி வருகிறது..!!
லண்டனில் வீடற்றோருக்கு ஈரடுக்குப் பேருந்துகள் உதவி வருகின்றன. மேலும் அந்த பேருந்து வீடு அற்றவர்களுக்கான வசிப்பிடங்களாகத் காணப்படுகின்றது. ஒவ்வொரு பேருந்திலும் 40 பேர்வரை தங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு பயன்படுத்தும் பேருந்து சேவையிலிருந்து அகற்றப்படடதாகவே காணப்பட்டவை ஆகும்.
பிரிட்டனைத் தளமாகக் கொண்ட Buses4Homeless என்னும் சமூக நிறுவனம், பேருந்துகளைத் தங்குமிடங்களாக மாற்றி அமைத்தமை. வீடு இல்லாதவர்கள் இதனைப் பயன்படுத்தி பலனடையலாம். உறங்கவும் சமைக்கவும் அங்கு வசதிகள் இருப்பதாகவும் அதே வேளையில் வேலைப் பயிற்சிகளும் பேருந்தில் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இங்கிலாந்தில் வீடு இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தனியார் வாடகையும் அதிகமாக உள்ளதாகவும் வீடின்றித் தவிப்போருக்குப் பேருந்துகள் ஆதரவளிக்கும் எனக் கருதப்படுகிறது.