மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகளின் வாயில் பேண்டேஜ் போட்டுவிட்டு கணவர் செய்த செயல்..!!
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் கணவர் எடுத்த விபரீத முடிவு ஒன்று இந்தியாவை அதிர வைத்துள்ளது. உத்திர பிரதேசத்தில் வசித்து வந்த பிரதீப் சங்கீதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களுக்கு மானஸ்வி, யஷ்வி, ஓஜாஸ்வி என்ற மூன்று பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். ஆரம்பத்தில் சிறந்த குடும்ப தலைவனாக இருந்த பிரதீப்குமார் சில நண்பர்களுடன் இணைந்து குடிபழக்கத்திற்கு அடிமையானார். இதனால் குடும்பத்தில் தினமும் சண்டை ஏற்பட்டுள்ளது. அத்துடன் பிரதீப் வேலைக்கு செல்வதை நிறுத்தி விட்டு மனைவியை கண்காணிக்க தொடங்கியுள்ளார். இதனால் சங்கீதாவின் பெற்றோருக்கும் மனமுடைந்து போனது.
கணவரை வேலைக்கு போக சொல்லி சங்கீதா சொன்னால் பிரச்சனை வெடித்தது. என்னை வேலைக்கு அனுப்பிவிட்டு யாரோடு போக போகிறாய் என பிரதீப் திட்டி வந்தார். சங்கீதாவின் பெற்றோருடன் வசித்து வந்த இவர்கள் சம்பவ தினத்தன்று வழமைபோல் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின் குழந்தைகள் கதறி அழ கதவை திறவுங்கள் என பெற்றோர் கூறியுள்ளனர்.
நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம் என பிரதீப் கூற அனைவரும் உறங்கச் சென்றுள்ளனர். அதிகாலை 4 மணியளவில் மீண்டும் சத்தம் கேட்டுள்ளது …கதவை க முயன்ற போது முடியாமல் போய் உள்ளது. திடீரென சத்தம் இன்றி போக சம்பவ இடத்திற்கு பொலீஸார் வந்தனர். கதவை உடைத்து அறைக்குள் சென்ற போது மூன்று பிள்ளைகள் மற்றும் சங்கீதாவின் வாயில் பண்டேஜ் போட்டுவிட்டு கொடூரமான முறையில் கத்தியால் குத்தியுள்ளார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில்..
சங்கீதா மற்றும் கடைசி மகளை மீட்டு வைத்தியசாலை அனுப்பிய போதும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். தனது குழந்தைகள் மற்றும் மனைவியை கொலை செய்துவிட்டு பிரதீப்பும் தற்கொலை செய்துகொண்டதால் கொலைக்கான காரணம் பெற்றோர் சொல்வதை வைத்து சந்தேகம் என்ற ரீதியில் பொலீஸார் விசாரணம் ஆரம்பித்துள்ளனர்.!!