வீடியோ காலில் காதலிக்க ஒருவர், திருமணம் செய்து வாழ ஒருவர், திட்டமிட்டு இரண்டு இளைஞர்களை ஒரே நேரத்தில் ஏமாற்றிய இளம் பெண்.!! அழகை காட்டி செய்த செயல்..!!!
காதலுக்கு ஒருவர் திருமணத்திற்கு ஒருவர் என திட்டமிட்டு ஏமாற்றிய பெண் ஒருவர் வசமாக மாட்டிக் கொண்டுள்ளார். இந்தியாவில் பெங்களூரை சேர்ந்தவர் ரம்யா ஸ்ரீ. கல்லூரி படிப்பை முடித்த இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். சீரியல் ஹீரோயின் போல் ஓரளவு அழகான ரம்யா ஸ்ரீக்கு வினய் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த இளைஞர் இந்தியாவில் இருந்து பிரான்ஸ் சென்று பணிபுரிந்து வருகிறார்.
8 வருடங்களுக்கு அவரால் இந்தியா வருவது கடினம் என ரம்யா ஸ்ரீயிடம் நட்பாக பழகும் போதே கூறியுள்ளார். சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்ட ரம்யா ஸ்ரீ வினயுடன் வீடியோ காலில் பேச ஆர்ம்பித்துள்ளார். வினய் பெரிதாக அழகு இல்லை, ஆனால் ரம்யா அழகி. ரம்யாவின் அழகில் மயங்கிய வினய் அவரை காதலிப்பதாக கூற மறுப்பு தெரிவிக்காமல் சம்மதம் சொல்லியுள்ளார் ரம்யாஸ்ரீ.
காதல் கண்ணை மறைக்க ஏராளமான பணத்தை ரம்யாவிற்காக அனுப்பியுள்ளார் வினய். 2 வருடத்திற்கு இந்திய மதிப்பில் சுமார் 30 லட்சம் ரூபாய் வரை அனுப்பியுள்ளார். இரவு வேலை செய்து சீட்டு போட்ட 12 ரூபாவை கார் வாங்குவதற்காக அனுப்பியுள்ளார் வினய். இந்த நிலையில் ரம்யாஸ்ரீக்கு வேறு இளைஞருடன் காதல் ஏற்பட்டுள்ளது. கார் வீடு தருவதாக கூறி திருமணமும் பேசப்பட்டுள்ளது.
தொழிலதிபரான திருமணம் பேசப்பட்ட இளைஞருக்கு ரம்யாஸ்ரீ மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.. மாட்டிக் கொள்ளாமல் இரண்டு போன், இரண்டு சிம் என இருவரையும் ஏமாற்றியுள்ளார். ஆனால் நன்பர்களின் உதவியுடன் குறித்த இளைஞர் ரம்யாஸ்ரீ பற்றி தேடியுள்ளார். இவருக்கு திடீரென கார் நகைகள் கிடைத்தது தொடர்பாக தேடிய போது வினய் பற்றி அறிந்துகொள்ள முடிந்துள்ளது.
குறித்த இளைஞர் வினயுடன் தொடர்பு கொண்டு பேசிய போது நடந்தவற்றை வினய் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ரம்யாஸ்ரீயை கான்பிரன்ஸ் காலில் இணைந்த இளைஞர்கள் துரோகம் பற்றி திட்டி தீர்த்துள்ளனர். அத்துடன் வினயின் பணத்தை இந்தியாவில் இருக்கும் வினயின் குடும்பத்திற்கு கொடுக்கும் படி இருவரும் கூறிய நிலையில் திருமணமும் நின்று போய் உள்ளது. பொலீஸிக்கு சென்று ரம்யா ஸ்ரீயை அவமான படுத்த விரும்பாத இருவரும் திட்டி தீர்த்ததுடன் நிறுத்தியுள்ளனர். இந்த விடயம் நண்பர்கள் மூலம் மீடியாக்களுக்கு கசிந்துள்ளது..!!