ஜனாதிபதி கோத்தபாய அவர்களே எங்களுக்கு அமைதி வேண்டும்..பிரபல தமிழ் கிரிக்கெட் வீரரின் வைரலாகும் டுவிட்..!!
ரசல் அர்னால்ட் என்கிற ரசல் பிரேமகுமரன் அர்னால்ட்..இந்த பெயரை 1997ம் ஆண்டில் இருந்து 2007ம் ஆண்டு வரை கிரிக்கெட் ரசிகர்களால் உச்சரிக்கப்பட்டதாகும். இலங்கை டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த வீரராக விளையாடி வந்த ரசல் 2007ம் ஆண்டின் பின் ஓய்வு பெற்றார்.
சொனாலி என்பவரை திருமணம் செய்துகொண்ட அர்னால்ட் தற்போது international commentatorஆஹ இருக்கிறார். இலங்கை தமிழனான ரசல் நேற்றைக்கு முன் தினம் இலங்கையில் நடந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக டுவிட் செய்துள்ளார்.
இதில் ஜனாதிபதி கோத்தபாய அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் ” எங்களுக்கு அமைதி மற்றும் வளர்ச்சி தான் தேவைப்படுகிறது அதனை நீங்கள் செய்வீர்கள் என நம்புகிறோம் என குறிப்பிட்டுள்ள அவர் குறித்த டுவிட்டை கோத்தபாய மற்றும் நாமல் ராஜபாக்ச இருவருக்கும் டேக் செய்துள்ளார்..!!
Congratulations @GotabayaR Sri Lanka’s next President !!! Togetherness ,peace and prosperity is what we all want .. Trust you will take us there.. Wishing you all the best @RajapaksaNamal
— Russel Arnold (@RusselArnold69) November 17, 2019