நடிகை சாந்தினி யாரென்றே தெரியாது, அவருடன் நான் வாழவில்லை, அமைச்சர் மணிகண்டன் அதிரடி.! நடந்தது இது தானாம்.
நடிகை சாந்தினி என்றால் யார் என்றே தெரியாது என முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கூறி இருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் நடிகை சாந்தினி அமைச்சர் மணி கண்டன் தன்னுடன் 5 வருடம் லிவிங் டுகெதர் வாழ்ந்ததாகவும், அதனால் 3 முறை கர்ப்பமானதாகவும் குழந்தை வேண்டாம் என மணி கண்டன் கருவை கலைத்ததாகவும் நடிகை சாந்தினி தெரிவித்திருந்தார்.
இந்த தகவல் இணையத்தில் வேகமாக வைரலான நிலையில் இன்றைய தினம் மணிகண்டன் மீடியாக்களை சந்தித்துள்ளார். அதில் யார் இந்த சாந்தினி ஏன் என்னை பின் தொடர்கிறார் என்று எனக்கே தெரியவில்லை. சில மாதங்களுக்கு முன்பு எனக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் நானும் சாந்தினி என்ற நடிகையும் ஒன்றாக இருந்த புகைப்படங்கள் தங்களிடம் இருப்பதாக கூறி 30 கோடி கேட்டார்கள்.
நான் 30 கோடிக்கு எங்கே போவது, அப்படி ஒரு நடிகையை தெரியாது என்றேன். பின் 3 கோடி கேட்டு மிரட்டினார்கள் பேசி பேசி இறுதியாக 30 லட்சத்தில் வந்து நின்றது. என் மரியாதை போய்விடும், என்பதற்காக சம்மதித்தேன். ஆனால் இப்போது தான் இந்த சாந்தினியை பார்த்து இருக்கிறேன் . நான் கரு கலைக்கவும் இல்லை, அவருடன் தவறான உறவில் இருக்கவும் இல்லை.
இவர்கள் என் மீது பழி போடுகின்றார்கள் என தெரிவித்துள்ளார். ஆனால் சாந்தினியோ அமைச்சர் மணிகண்டனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும், மருத்துவ ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளார். தற்போது பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.!!