சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு அதிகரிக்கும் வேகம் சற்று குறைக்கப்பட்டுள்ளது…!!
சிங்கப்பூரின் வெள்ளியின் மதிப்பு அதிகரிக்கும் வேகத்தை சிங்கப்பூர் நாணய வாரியம் சற்று குறைத்துள்ளது. மெதுவடைந்துள்ள பொருளியல் வளர்ச்சி, குறைவான பணவீக்கம் போன்றவற்றுக்கு இடையில் சந்தை எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு, வாரியம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
தற்போது பொருளியல் முன்னுரைப்புக்கு ஏற்றவாறு, நடுத்தரக்கால விலை நிலைத்தன்மையோடு ஒன்றினையும் வகையில் நிதானமான இந்தக் கொள்கை நிலைப்பாடு எடுக்கப்பட்டிருப்பதாக வாரியம் தெரிவிக்கப்பட்டது.
பொருளியல் செயற்பாடுகளுக்கு,அமைய நுணுக்கமாகக் கண்காணித்து வரப்போவதாகவும் வாரியம் கூறியுள்ளது. பணவீக்கமும் பொருளியல் வளர்ச்சியும் கணிசமாக பலவீனமடைந்தால், அதற்கு பங்கேற்று நாணயக் கொள்கை சீரமைக்கப்படும் என்றும் வாரியம் கூறியுள்ளது.
வட்டி விகிதங்களைத் தீர்மானிக்காமல், சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு ஒரு தெரிவித்த விகிதத்துக்குள் ஏறி இறங்க அனுமதிக்கும் முறையை, வாரியம் பின் பற்றியுள்ளது. 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு, சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு சற்றே குறைய மத்திய வங்கி அனுமதித்திருப்பது இதுவே முதன்முறை. பரிவர்த்தனை சார்ந்த நாணயக் கொள்கையை, வாரியம் இந்த மாதம் சற்றே தளர்த்துள்ளது என்றும் பொருளியல் வல்லுநர்கள் பலரும் ஏற்கனவே முன்னுரைத்திருந்தனர்.