9 மாதக் குழந்தையை கொலை செய்தாக நபர் ஒருவர் மீது குற்றச்சாட்டு..!!!
சிங்கப்பூர் யீஷூன் வட்டாரத்திலுள்ள கார் பாக்கில் 9 மாதக் குழந்தையைக் கொலை நபர் மீது குற்றம் சுமத்தியுள்ளார். 27 வயதுடைய முகமது அலிஃப், யீஷூன் ஸ்டீரீட் 81-இல் உள்ள புளோக் 840A-இல் இருக்கும் அடுக்குமாடிக் கார் பாக்கில் குழந்தையைத் தாக்கியதாக சந்தேகிக்கப்படுகிறது.
குழந்தையை கொலை செய்த சம்பவம் 7 ஆம் திகதி இரவு 10 மணிக்கும் நள்ளிரவு 12:15 மணிக்கும் இடையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அலிஃப் மீது முதலில் வேண்டும் என்றே படுகாயம் நடந்ததாக குற்றம் சட்டியுள்ளார். அது தற்போது கொலை குற்றமாக மாற்றப்பட்டுள்ளது.
கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் நபருக்கு தூக்குத் தண்டனை அல்லது ஆயுள் தண்டனை, பிரம்படிகள் விதிக்கப்படலாம்.